Monday 24 October 2011

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி



கிருஷ்ணபரமாத்மா நரகாசூரனை அழித்ததன் மூலம் தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய நாளை தீபாவளியாக கொண்டாடுகிறோம்.முன்பு போல் அல்லாமல்
நாட்டில் அநியாயம்,அக்கிரமம்.கொலை,கள்ளத்தொடர்பு,கொள்ளை,அரசியல்வாதிகளின் ஊழல்
போன்றவை மலிந்து விட்ட இந்தக்காலத்தில் இவற்றையெல்லாம் அழிக்க கடவுள் தான் வரவேண்டும் என்ற எண்ணமில்லாமல் நாம் ஒவ்வொருவரும் மலிந்துவிட்ட தீயவைகளை
ஒழிக்க இந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.இந்த நாளில் இந்த வலைதளத்தை பார்வையிடும் வாசக,வாசகிகள் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்



தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் புதிய திரைப்படங்களை பாருங்கள்.வேலாயுதம்,ஏழாம் அறிவு
என இரண்டு படங்கள் வரவிருக்கின்றன.இதில் ஏழாம் அறிவு அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.போதிதர்மன் என்ற தமிழர் இவர் தற்காப்பு கலையை பயிற்றுவித்தவர் .இவர்
வேடத்தில் சூர்யா தோன்றுவது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது இதே போல் விஜயின்
வேலாயுதம் படமும் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது இந்தபடங்கள் வெற்றிபெற வாழ்த்துவோம்.அனைவரும் தீபாவளியை இனிமையாக கொண்டாடுவோம்.

இதோ தீபாவளிக்காக சில சிறப்பு பாடல்கள்


No comments:

Post a Comment