Thursday 3 May 2012

குஷ்பூ ஒரு கும் வரலாறு

நக்கத் என்ற இயற்பெயருடைய குஷ்பூ தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து எஸ்.பி முத்துராமன் இயக்கிய தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.முதல் படத்திலேயே யார் இந்த நடிகை என எல்லோரையும் விழிகள் வியக்கவைத்தார்.துரு துரு குஷ்பூவை எல்லா மக்களுக்கும் பிடித்த காலம் அது.இரண்டாவது படமான வருஷம் 16 மிகப்பெரிய வெற்றிபெற்றதால் குஷ்பூவுக்கு தமிழக பெண்கள் ,ஆண்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.கொழுகொழுவென்று இருந்த குஷ்பூவை
அனைவருமே இந்தப்படத்தில் விரும்பினர்.அதன் பின் வந்த சின்னத்தம்பி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதால் குஷ்பூ அசைக்க முடியாத அளவிற்க்கு சென்று தமிழ்நாட்டில் திருச்சியில் கோவில் கட்டுமளவிற்க்கு சென்றார் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே  ஒரு நடிகைக்கு கோவில் கட்டியது
தமிழ்நாட்டில்தான்.சின்னதம்பி படத்திற்க்கு பிறகு பிரபுவுடனே உத்தமராசா,பாண்டித்துரை என தொடர்ந்து நடித்ததால் பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் காதல் என்று பரபரப்பு நிலவியது அந்நாட்களில். ஒரு கட்டத்தில் பிரபுவும் குஷ்புவூம் ரகசியதிருமணம் என்றுதினத்தந்தி நாளிதல் செய்தி வெளியிட்டது மீடியாக்களில் பரபரப்பு நடிகையாகவே குஷ்பூ வலம் வந்தார்.மீடியாக்களில் மட்டுமல்லாது குஷ்பூ பெயர் ஹோட்டல்களில் கூட சாருக்கு ரெண்டு குஷ்பூ இட்லி பார்சல் என்று சொல்லுமளவிற்க்கு எல்லா ஹோட்டல்களிலும் குஷ்பூவின் பெயரில் இட்லி கூட பரபரப்பாக இருந்தது.பின்பு முறைமாமன் படம் மூலம் சுந்தர்.சி யை லவ்விய  குஷ்பூ அவரையே மணந்து தமிழ்நாட்டின் மருமகளாகி விட்டார்.தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்

No comments:

Post a Comment