Sunday 20 November 2011

அதிர்ஷ்டம் அழைத்தும் துரதிருஷ்டம் துரத்திய கலைஞர்கள்

சினிமாவில் வாய்ப்பு என்பது சாதாரண மனிதருக்கு குதிரைக்கொம்பான விஷயம் வாய்ப்புகள்
கிடைப்பதே அரிதான சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் துரதிருஷ்டத்தால் அதை இழந்தவர்களும் உண்டு அப்படிப்பட்டவர்கள் பற்றி பார்க்கவே இந்த பதிவு.

விஜயன்

80களில் வந்த படங்களில் இவர்தான் அப்போதைய படங்களின் ஹீரோ அப்போது உச்சத்தில்
இருந்த நடிகர் இவர் பின்பு ரஜினி,கமல் எழுச்சிக்குபிறகு இவர் கொஞ்சம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தேவிட்டார்.படவரவுகள் இன்றி 25வருடங்களுக்கும் மேல் கஷ்டப்பட்டார்
உதிரிப்பூக்கள் உட்பட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவருக்கே இந்த நிலைமை பார்த்துக்கொள்ளுங்கள்.சில தீயபழக்கங்களால் உடல்நிலை மோசமானது.கண்ணீர்மல்க சில‌
பத்திரிக்கைகளில் இவர் பேட்டி வெளியானது சாப்பட்டிற்க்கு கூட கஷ்டம் என்ற ரீதியில் இருந்தது இவர் பேட்டி.இதைப்பார்த்து இரக்கப்பட்ட ஏ.ஆர் முருகதாஸ் ,செல்வராகவன்
உட்பட சில இயக்குனர்கள் தங்களின் ரமணா,7ஜி ரெயின்பொகாலனி உட்பட பல படங்களில்
இவரை குணச்சித்திரவேடத்தில் நடிக்கவைத்தனர்.இவரின் குணச்சித்திரநடிப்புக்காக மீண்டும்
இவரைபடவாய்ப்பு துரத்தியது.துரதிருஷ்டம் காரணமாக மாரடைப்பால் இவர் காலமானார்.


பாண்டியன்

அண்ணே வணக்கணே என்று மதுரைத்தமிழில் கொஞ்சும் பாண்டியனை அவ்வளவு சீக்கிரம்
மறந்துவிடமுடியாது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் கடை வைத்து இருந்தவர்
நடிகர் பாண்டியன் .மண்வாசனை படத்திற்க்கு கதாநாயகனுக்கு புதுமுகநடிகர் தேடிக்கொண்டு
இருந்தபோது இயக்குனர் பாரதிராஜாவால் கண்டெடுக்கப்பட்டவர்.நல்ல நடிப்புதிறமையுள்ளவர்
ஆண்பாவம்,மண்வாசனை,ஆண்களை நம்பாதே படங்களைத்தவிர துண்டு துக்கடா வேடங்களில்தான் அதிகம் நடித்தவர்.நல்ல நடிகராக வந்துஇருக்கவேண்டியவர் சில தீயபழக்கங்களுக்கு ஆட்பட்டு கிட்னிபெய்லியரில் மரணமடைந்தார்.

லூஸ்மோகன்

பல படங்களில் காமெடியில் கலக்கியவர் லூஸ்மோகன் அவர்கள் மெட்ராஸ் பாஷை தெரியாதவர்கள் இவர் படங்களை பார்த்தால் போதும்.இவர் கடைசியாக நடித்த படம்
அழகி.பலபடங்களில் காசுபணம் சம்பாதித்த இந்த நடிகர் மகன் மருமகளின் புறக்கணிப்பால்
ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்.86வயதாகி தள்ளாடும் லூஸ்மோகன்
மகன் மீது புகார் செய்ய கமிஷனர் ஆபிசுக்கு வந்தபோதுதான் இந்த விஷயம் தெரிந்தது.

என் உயிர் தோழன் பாபு

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு  என் உயிர்தோழன் படத்தில் அறிமுகமான பாபு
அடுத்ததாக விக்ரமனின் பெரும்புள்ளி படத்தில் நடித்தார்.தொடர்ந்து தாயம்மா உட்பட‌
சில படங்களில் நடித்தவர்.ஒரு படத்தின் படப்பிடிப்பில் டூப் போடாமல் இவரே ஒரு சண்டைக்காட்சியில் மேலிருந்து குதித்தவர் குதித்தவர்தான்.படுத்த படுக்கையாக 20 வருடங்களுக்கு மேல் படுக்கையிலே எல்லாமுமாக இருந்தார் தற்போதுதான் பாபுவின்
உடல்நிலை ஓரளவிற்க்கு சீராகியுள்ளதாக கேள்வி.இவர் நடிக்க முடியாததால் தற்போது
கதைவசனம் எழுதமுயற்சி செய்கிறார் இவரின் வாழ்க்கையை  நடிகர் இயக்குனர் பொன்வண்ணன் படமாக எடுக்கபோவதாக வந்த தகவல் என்னாயிற்று எனத்தெரியவில்லை
பாபு இப்போது



உதயப்பிரகாஷ்

சின்னத்தம்பி,கட்டபொம்மன்.சின்னஜமீன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்த இவர்
சில தீயபழக்கவழக்கங்களால்மனநிலை பாதிக்கப்பட்டு சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் சுற்றி கொண்டு
இருந்ததாக ஆரம்பத்தில் சில தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பபட்டது. திடீரென‌
ஒருநாள் நடிகர் சங்கவாசலில் இறந்து கிடந்தது பார்ப்பவர்களை அதிர்ச்சிகொள்ளசெய்தது.


மோனிஷா

மலையாள நடிகையான இவர் தமிழில் அறிமுகமான உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மூன்றாவது கண் என மளமளவென படங்களிலநடித்தார்  தமிழில் தொடர்ந்து பல வாய்ப்புகள்
தேடிவந்த நிலையில் கேரளாவில் நடந்த ஒரு சாலைவிபத்தில் மரணமடைந்தார்.



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இன்றைக்கும் பழையபாடல்களில் தத்துவப்பாடல்கள் என்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியபாடல்கள்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் இவர்
எழுதியபாடல்கள் குறைவு அதற்க்கு காரணம் இவரின் வாழ்க்கை 30வயதிற்க்குள்ளேயே
முடிந்துபோனதுதான்.குறைந்த பாடல்கள் எழுதிய பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்
இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அவரின் மகிமையை தற்போது குத்துப்பாட்டு
ஆபாசப்பாட்டு எழுதும் இளையதலைமுறை கவிஞர்கள் உணரவேண்டும்


நடிகர் குட்டி

தீயவன் ஒருவன் செய்த செயலால் கால்களை இழந்த குட்டி ஒற்றைக்காலிலே நடனமாட பயிற்சி
எடுத்து டான்ஸ் ஆடி தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்.இயக்குனர் கேயாரின் ஒத்துழைப்பால் டான்ஸர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இவரின் துரதிருஷ்டம் படம்
வந்து சில நாட்களிலே பரமகுடிக்கு ஒரு டான்ஸ் நிகழ்ச்சிக்கு வந்தவர் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

ராமராஜன்
ஒரு காலத்தில் பலபடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ராமராஜன் .கடுமையான குடும்பபிரச்னை மனைவியுடன்
விவாகரத்து என பல சம்பவங்கள் நடந்து .சொந்த ஊரான மேலூரில் 500ரூபாய்க்கு கூட கஷ்டப்படுகிறேன் எனப்பேட்டி
கொடுத்தவர்.நீண்ட இடைவேளைக்கு பிறகு மேதை என்ற படம் நடித்தார் அதுவும் வராத அளவுக்கு சமீபத்தில் பயங்கர‌
கார் விபத்தில் மாட்டி பிழைத்ததே பெரியவிஷயமாக போய்விட்டது.இவர் சார்ந்திருக்கும் கட்சிதான் அனைத்து மருத்துவ செலவுகளை செய்கிறது துரதிருஷ்டமும் அதிர்ஷ்டமும் மனிதர்களை எப்படியெல்லாம் துரத்துகிறது என்று
பாருங்கள்



பாரிவெங்கட்

எஸ்.வி சேகரின் நாடகங்களில் நடித்துவந்த இவர் இயக்குனர் எழிலால் துள்ளாதமனமும் துள்ளும் படத்தில் நடித்தார்
அந்த படத்தில் இவரின் காமெடி பட்டையை கிளப்ப ஓவர் நைட்டில் பாப்புலரானார்.தொடர்ந்து பல படங்களில் காமெடி
வேடத்தில் நடிக்க அடுத்தடுத்து படங்களில் புக் ஆனார்.விதிவசத்தால் திருநெல்வேலி படத்தின் ஷூட்டிங் நடித்து
முடித்துவிட்டு சென்னை திரும்பும்போது.இவர் வந்த பஸ் விபத்துக்குள்ளாகி இறந்தார்.

இந்த வீடியோவில் உள்ளவரே பாரிவெங்கட்


 

No comments:

Post a Comment