Sunday 6 November 2011

நான் கும்பிடுற அந்த மருதமலை முருகன்

மேலே சொன்ன தலைப்பை ஒரு படத்தில் விவேக்கிடம் செல்முருகன் பேசுவார் டேய் இந்த ஏ.வி.எம் ராஜன் எபெக்ட்லாம் என்கிட்ட போடாத என்பார் விவேக்.ஆம் ஏ.வி.எம் ராஜன் பற்றிபார்க்கவே இந்த பதிவு


தனது அருமையான நடிப்பால் தமிழக மக்களை கவர்ந்தவர் இவரின் படங்களில் எனக்கு பிடித்தது துலாபாரம் என்ற படம் பிரபல மலையாள நடிகை சாரதாவுடன் இந்த படத்தில்
நடித்திருப்பார்.மிக அருமையான படம் அது.பார்ப்பவர்களை எல்லாம் கண்கலங்க வைத்துவிடும்
இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஊர்வசி விருது பெற்றவர் நடிகை சாரதா
அவர்கள்.ஏவிஎம் சிறப்புக்கு காரணமே அவரின் பக்திபடங்கள் தான் இவர் நடித்த துணைவன்
,தெய்வம்,திருவருள் மூன்று பக்திபடங்களுமே தேவர் பிலிம்ஸ் படங்களாகும் சாண்டோ சின்னப்பா தேவர் தீவிர மருதமலை முருகபக்தராதலால் இவரின் படங்களில் மருதமலை
இடம்பெற்றுவிடும்.இவரின் படங்கள் குறிப்பாக தெய்வம் மிகப்பெரிய வெற்றிபடமாகும்
அதேபோல் திருவருள் படத்தில் இடம் பெற்ற கந்தன் காலடியை வணங்கினால் பாடல் மிகச்சிறந்த பாடல் ஆகும் இவர் பிரபல நடிகையும் இவருடன் பல படங்களில் நடித்த நடிகையுமான புஷ்பலதாவை மணமுடித்தார்.மருதமலை முருகன் கோவிலுக்கு நிறைய‌
அறப்பணிகள் செய்துள்ளார்.ஆனால் தற்போது
முழுநேர கிறிஸ்தவமதபோதகராக மாறிவிட்டார்.

No comments:

Post a Comment