Tuesday 10 April 2012

கண்ணதாசன் ஒரு வரலாற்று நாயகன்

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.இவர் பிறந்த ஊர் முந்தைய இராமநாதபுரம் மாவட்டமும் இப்போதைய சிவகங்கை மாவட்டமுமாகிய காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமம்எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஐந்து நிமிடத்தில் பாடல் எழுதிவிடக்கூடிய வல்லமை பெற்றவர்.இவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற வருத்தம் இன்னும் எனக்கு உள்ளது.இவரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சுமைதாங்கி படத்தில் இடம்பெற்ற மயக்கமா கலக்கமா என்ற பாடல் இந்த பாடலில் வரும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற பாடல் வரி மிகவும் என்னை கவர்ந்தது.எத்தனையோ சிறப்பான பாடல்களை   எழுதிய மகான் இவர்.இவர் இயேசு காவியம்,அர்த்தமுள்ள இந்துமதம் உள்ளிட்ட சில நூல்களையும் எழுதியவர்.இவரின் மருமகன் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் பஞ்சு அருணாசலம் ஆவார் கண்ணதாசன் சொல்ல சொல்ல கேட்டு எழுதியவி இவர். இவர் மருதுபாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் சிவகங்கை சீமை உள்ளிட்ட சில படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் ஆவார். கொஞ்சம் மதுப்பழக்கம் உள்ளவர்.இவர் மதுப்பழக்கவழக்கத்தை உள்ளடக்கிய வசந்தமாளிகை படத்தில் இடம்பெற்ற மதுக்கிண்ணத்தை ஏந்துகிறேன்.இரண்டு மனம் வேண்டும் உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய ஹிட் பாடல்கள்.ரத்ததிலகம் படத்தின் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.சூரியகாந்தி படத்தில் இடம்பெற்ற பரமசிவன் கழுத்திலிருந்து பாம்புகேட்டது போன்ற‌
பாடல்களில் நடிக்கவும் செய்துள்ளார் இவரின் மகள்கள்
விசாலி,மதுபாலா ஆகியோர் திரைப்படத்துறையில் புகழ்பெற்றவர்கள்.விஸ்வநாதன் ராமமூர்த்தி,கேவி மகாதேவன் இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார் இவர் இசைஞானி இளையராஜா இசையில் எழுதிய மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல் இன்றுவரை இரவு நேரத்தை இனிமையாக்கும் பாடலாக உலா வருகிறது.இதுவே சினிமாவில் இவர் எழுதிய கடைசிப்பாடலாகும் .இத்தோடு உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று 1981 ஜூலை மாதம் மரணமடைந்தார் இறந்தாலும் பிறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்னும் மக்கள் மனதில்
வாழ்ந்துகொண்டிருப்பவர் இவர் .

No comments:

Post a Comment