Saturday 12 November 2011

சூப்பர் ஹிட் சுரேஷ் கிருஷ்ணா



ஏக் துஜே கேலியே படத்தை பாலச்சந்தர் அவர்கள் ஹிந்தியில் இயக்கியபோது அந்த யூனிட்டில்
அக்கவுண்டன்ட் ஆக வேலைசெய்தவர் இவர் .படத்தின் கதாநாயகி சில காட்சிகளில் தமிழ் பேச‌
வேண்டும் ரதிக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் மொழிபெயர்ப்பாளர் வரவில்லை.படத்தின்
ஷூட்டிங் தாமதமாவதை உணர்ந்த பாலச்சந்தர் அவர்கள் யாராவது மொழிபெயர்ப்பாளர்
கிடைப்பாரா எனத்தேடியபோது தமிழும் ஹிந்தியும் தெரிந்ததமிழரான‌அக்கவுண்டன்ட் சுரேஷ்கிருஷ்ணா சிக்கினார் அவரை வைத்தே ரதிக்கு முழுவதும் தமிழ் சொல்லி தரப்பட்டது

.
இவரது திறமையை உணர்ந்து பாலச்சந்தர் இவரை அசோசியேட்டாக சேர்த்துக்கொண்டார்
சிந்துபைரவி உள்ளிட்ட பல படங்களில் அசோசியேட்டாக இருந்த இவரை கமலஹாசனின்
நட்பால் சத்யா படத்தின் இயக்குனரானார் தொடர்ந்து கமலை வைத்து இந்திரன் சந்திரன்
படத்தை இயக்கினார்.பிரபு நடிப்பில் ராஜா கைய வெச்சா படத்தை இயக்கினார்.சரத்குமாரை வைத்து வேடன் படத்தை
இயக்கினார். இவரது குருநாதர் பாலச்சந்தர் அவர்கள் தயாரித்த அண்ணாமலை
படம் இயக்கினார் படம் மிகப்பெரும் வெற்றிபெற்றது தொடர்ந்து இவர் இயக்கிய வீரா
சற்று சுமார் ரகம்தான் அடுத்து இவர் இயக்கிய பாட்ஷா திரைப்படம் வரலாறு காணாத வெற்றி
பெற்றது.அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் ஆஹா படத்தை இயக்கினார் இந்தபடம் சிறந்த‌
குடும்பசித்திரமாக வெற்றிபெற்றது.சத்யராஜ்,பிரபு வை வைத்து சிவசக்தி படமும் தோல்விப்படம் ஆகும்.இவர் இயக்கிய சங்கமம் படத்தில் ரஹ்மான் இசையில் பாடல்கள் வெற்றிபெற்றாலும் படம்
தோல்விப்படமாகும் தொடர்ந்து ஆளவந்தான்,பாபா,கஜேந்திரா,ஆறுமுகம் தொடர்ந்து
தோல்விப்படமாக  கொடுப்பது சற்றுவருத்தமளிக்கிறது.

No comments:

Post a Comment