Thursday 13 October 2011

சினிமா இயக்குனரான ஐ.ஏ.எஸ் அதிகாரி



1994ம் ஆண்டு வெளிவந்த மோகமுள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர்
ஞானராஜசேகரன் .இவர் இயக்கிய முதல் படம் தி.ஜானகிராமன் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டுவந்த படம் ஆகும்.இந்த படம் ஒரு பிராமணகுடும்பத்தின் பின்னணியில் கதைக்களம் கொண்ட படம் ஆகும் இந்தபடம்   சரியாக போகவில்லை நல்ல இயக்குனர்
என்ற பெயரை மட்டும் இவருக்கு வாங்கிதந்தது.படத்தின் பாடல்கள் இசைஞானியின் இசையில்
சொல்லாயோ வாய் திறந்து,கமலம் பாதகமலம்,அருண்மொழியின் குரலில் நெஞ்சே குருநாதர்,
போன்றபாடல்கள் அருமையாக வந்து இருந்தன அடுத்தாக இவர் இயக்கிய பாரதி படம் சிறந்த‌
திரைப்படமாக வந்தது பாரதியின் வரலாற்றை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பாமர மக்களிடமும் கொண்டுபோய் சேர்த்தவர்.இந்த படத்திற்காக பவதாரிணி மயில் போல பொண்ணு
ஒண்ணு பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருது வாங்கினார் என்பது குறிப்பிடதக்கது

அடுத்தாக இவர் சத்யராஜை வைத்து பெரியார் படத்தை இயக்கினார் இந்த படம் வசூலை வாரிக்குவிக்காவிட்டாலும் சத்யராஜுக்கும் இயக்குனருக்கும் நல்ல பெயரை பெற்றுதந்தது.இவ்வளவு அருமையான படங்களை கொடுத்த இயக்குனர் ஞான்ராஜசேகரன் ஒரு
ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடதக்கது

No comments:

Post a Comment