Friday 16 September 2011

பூர்வ ஜென்ம பந்தங்கள


சென்ற பதிவில் பள்ளி ,கல்லூரி காலத்து நினைவுகள் பற்றி பார்த்தோம் இந்த பதிவில் முன் ஜென்ம நினைவுகள் பற்றிய படங்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்

நெஞ்சம் மறப்பதில்லை

கல்யாணகுமார் நடித்து    இயக்குனர்    இயக்குனர் ஸ்ரீதர்           இயக்கத்தில் வெளியான முன் ஜென்ம காதல் கதை
முன் ஜென்மத்தில் ஜமீனனான கல்யாணகுமாரின் காதலை பெரிய ஜமீனான நம்பியார் பிரித்து
விடுகிறார் .அடுத்த ஜென்மத்தில் நண்பனின் கிராமத்துக்கு விடுமுறைக்கு வரும் கல்யாணகுமார்
தான் பார்த்து பழக்கப்பட்ட இடம் போலவே நண்பனின் கிராமம் தெரிவதால் விரிகிறது ப்ளாஷ்பேக் .முன் ஜென்ம நினைவுகளை அற்புதமாக சொன்ன படம் நெஞ்சம் மறப்பதில்லை.
நெஞ்சம் மறப்பதில்லைஎன்ற இனிய பாடல் நம் மனதை என்னவோ செய்வது நிச்சயம்.


எனக்குள் ஒருவன்


நகரத்து இளைஞனான கமலுக்கு திடீரென்று பழைய நினைவுகள் வர தொடங்க முன் ஜென்மத்தில் டார்ஜிலிங்கில் வாழ்ந்த சைனா மீசைக்கார கராத்தே குங்ஃபூ வில் தேர்ச்சி பெற்ற
கமல்தான் எனத்தெரிய வர விறுவிறுப்படைகிறது படம். சொத்துக்காக முற்பிறவியில் தம்மை போட்டுதள்ளிய சத்யராஜை பழிவாங்கவே தான் இப்பிறவி எடுத்திருப்பதை உணரும் கமலஹாசன் தான் எண்ணியதை நிறைவேற்றுகிறார் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்றபடம் இது

2 comments:

  1. நினைவுபடுத்திக் கொண்டு விட்டேன். படத்தின் பெயர் நம்பினால் நம்புங்கள்.

    ReplyDelete
  2. போன ஜென்மத்தைப் பற்றிய படம் தான் அது.

    ReplyDelete