Tuesday 13 September 2011

ரகுவரன்

எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த வில்லன் நடிகர் இவர்
ஏழாவதுமனிதன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் பாரதியாரின் பாடல்கள்
இப்படத்தில் இடம்பெற்று இருக்கும்.குறிப்பாக காக்கைசிறகினிலே நந்தலாலா என்ற பாடலில்

ரகுவரன் வண்டியில் செல்லும்போது இப்பாடல் இடம்பெறும்.ரகுவரன் வண்டியையும் இயக்கிகொண்டு இப்பாடலையும் பாடிக்கொண்டு செல்லும் அழகே தனி.மேலும் ஒரு ஓடை
நதியாகிறது படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பார்.அதில் இடம் பெற்ற தலையைகுனியும்
தாமரையே பாடலும் யாரும் மறந்திருக்க முடியாது.இவர் கூட்டுபுழுக்கள் ,ஏழாவதுமனிதன் ,ஒரு ஓடைநதியாகிறது போன்ற படங்கள் கதாநாயகனாக நடித்த படங்கள் ஆகும்


சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கஞ்சத்தனமாக எல்லாவற்றிற்க்கும் கணக்கு பார்க்கும்
மனிதராக இவர் நடித்து இருப்பார்.அண்ணாநகர் முதல் தெரு படத்தில் அமைதியான ஆசிரியராக‌
நடித்து இருப்பார் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தைக்கு ஏங்கும் தந்தை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருப்பார் முதல்வன் படத்தில் அர்ஜூன் பேட்டி எடுக்கும்



காட்சியில் சிறப்பாக‌ நடித்து இருப்பார்.இவர் இவ்வளவு சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து
இருந்தாலும் அனைவராலும் ரகுவரன் என்று சொன்னவுடன் உடனே நினைவுக்கு வருவது
புரியாத புதிர் படத்தில் இடம்பெற்ற காட்சியான ஐ நோ ஐ நோ என்று இவர் தொடர்ந்து சொல்லும்

காட்சிதான்.பூவிழி வாசலிலே படத்தில் மாற்றுத்திறனாளியாக இவர் நடித்த
வில்லன் கதாபாத்திரமும் புகழ்பெற்றது தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்து
முடிப்பவர்.பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய ஒரு மனிதனின் கதை படத்திலும் நாடகத்திலும் நடித்து குடிப்பழக்கத்தின் கொடுமைகளை சொன்னவர்.             
இவர் கடைசியாக நடித்த‌
படம் யாரடி நீ மோகினி.சமீபத்தில் இவர் இயற்கை எய்தினார்.இவர் இருந்தாலும் இறந்தாலும்
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

1 comment:

  1. உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்
    Press Meet Gallery

    ReplyDelete