Thursday 15 September 2011

ஆர்.சுந்தர்ராஜன்


இவர் இயக்கிய முதல் திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை படம் 400 நாட்கள் ஓடி மிகப்பெறும் வெற்றிபெற்றது.இவரும் நம்ம சத்யராஜ்,மணிவண்ணன் மாதிரி கோயமுத்தூரை சேர்ந்தவர் அதனால் இவரிடமும் கோயமுத்தூர் குசும்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.சிவக்குமாரை வைத்து இவர் இயக்கிய சுகமான ராகங்கள் போதிய‌

வெற்றியை பெறவில்லை.இருப்பினும் இவர் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் வெற்றி இயக்குனர் வரிசையில் இணைந்தார்.தொட‌ர்ந்து விஜ‌ய‌காந்த்தை வைத்து அம்ம‌ன் கோவில் கிழ‌க்காலே,என் ஆசைம‌ச்சான்,காந்தி பிறந்தமண் போன்ற படங்களையும் மோகனை வைத்து பயணங்கள்
முடிவதில்லை ,மெல்லதிறந்தது கதவு, நான் பாடும் பாடல் படங்களையும் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்தை வைத்து ராஜாதிராஜா படத்தையும் கார்த்திக்கை வைத்து என் ஜீவன் பாடுது


படத்தையும் பிரபுவை வைத்து சீதனம் படத்தையும் சத்யராஜை வைத்து திருமதி பழனிச்சாமி படத்தையும் 80,90களில் புகழின் உச்சத்தில் இருந்த அனைத்து நடிகர்களையும்
அடுத்த தலைமுறை நடிகரான விஜயை வைத்து காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தையும் இயக்கியவர்.இவரின் படங்களில் 95 சதவீதபடங்கள் வெற்றிபடங்கள் ஆகும்

No comments:

Post a Comment