Sunday 18 September 2011

தமிழ் சினிமாக்களின் முன்னோடி ஸ்டுடியோக்கள



இன்று கோடம்பாக்கம் தமிழ் சினிமாவின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது ஆனால் 50 வருடங்களுக்கு முன்பு தமிழ்சினிமாவில் சென்னையில் மட்டும் அல்லாது மற்ற ஊர்களில் ஸ்டுடியோக்களை வைத்துக்கொண்டு சிறந்த படங்களை கொடுத்து ஜெயித்த பட அதிபர்கள்
இருந்தார்கள் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படங்கள் அதிகம் அவை வெற்றிபெற்றதும்
அதிகம்.அற்புதமான அந்த ஸ்டுடியோக்களை பற்றிதான் இந்த கட்டுரை.

ஏ.வி.எம் ஸ்டுடியோ



நவீன யுகத்தில் அயன்,முதல் இடம் என்று படங்களை கொடுத்துகொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் காரைக்குடி அருகே தேவக்கோட்டை ரஸ்தாவில் ஸ்டுடியோஅமைத்து இவர்கள் எடுத்த நாம் இருவர்,வேதாள உலகம் போன்று கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படங்கள்தான் அதிகம்
பின்னாட்களில் ஏ.வி.எம் அசுர வளர்ச்சியடைந்து இன்றளவும் அசைக்க முடியாததாக சென்னையில் உள்ளது.

 பட்சிராஜா ஸ்டுடியோ


கோவையில் இயங்கிய இந்த ஸ்டுடியோ மிக பழமையான ஸ்டுடியோ கடைசியாக இங்கு எடுக்கப்பட்ட படம் நடிகர் திலகம் நடித்த நான் பெற்ற செல்வம் திரைப்படம்தான் ஸ்ரீவள்ளி
போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டன தற்பொழுதும் பழமையோடு
கோவையில் இந்த ஸ்டுடியோ உள்ளது.

மாடர்ன் தியேட்டர்ஸ்




சேலம் ஏற்காடு சாலையில் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த ஸ்டுடியோவை உருவாக்கியவர் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் ஆவார். இவர் ஏராளமான திரைப்படங்களை
தயாரித்தவர்.தமிழின் முதல் வண்ணதிரைப்படமான[ கேவாகலர்] அலிபாபாவும்40திருடர்களும் படம்தான் இன்றும் நினைவுசின்னமாக உள்ளது சேலம் சென்றால் அனைவரும் பார்க்க வேண்டிய இடம்

ஜெமினி ஸ்டுடியோ

எஸ்.எஸ்வாசன் அவர்களின் ஸ்டுடியோ இது சென்னையில்தான் உள்ளது இங்கு அவ்வையார்,மிகுந்த பொருட்செலவில் சந்திரலேகா [விஜய் நடித்தது அல்ல]ஆகிய படங்கள்
தயாரிக்கப்பட்டன‌

 பிரசாத் ஸ்டுடியோ

எல்.வி பிரசாத் அவர்களின் ஸ்டுடியோ இங்குதான் மனோகரா போன்ற திரைப்படங்கள்
தயாரிக்கபட்டது காலமாற்றத்தால் இன்று நாகரீகமாக இந்த ஸ்டுடியோ உள்ளது




No comments:

Post a Comment