Friday 18 November 2011

சூறாவளி சூர்யா

சிறந்த இலக்கியவாதியான நடிகர் சிவக்குமாரின் மகனான சூர்யா.தந்தையை போலவே சிறப்புடையவர்.ஆரம்பத்தில் தமிழ் மலர்களின் ஆயிரக்கணக்கான பெயர்களை மனப்பாடம்
செய்து ஒரு நிமிடத்தில் அதை அனைத்தையும் சொல்லி கைதட்டல் வாங்கியவர் தான் பார்த்த‌
கார்மெண்ட்ஸ் கம்பெனி வேலையை விட்டு நடிக்கவந்தார்.சிவக்குமாரின் வாரிசு என்ற அறிமுகத்துடன் நேருக்கு நேர் படத்தில் நடித்தார் ஆரம்பத்தில் ஏனோ தானோவென்று நடித்த‌
சூர்யாவை தமிழ் முன்னணி பத்திரிக்கையான விகடன் கூட சூர்யா ஆரம்ப படங்களில் ஆடிய‌
டான்ஸைப்பார்த்துவிட்டு சூர்யா டான்ஸ் ஆடாமல் இருப்பது டான்ஸுக்கு நல்லது என விமர்சனம் எழுதப்பட்டது தொடர்ந்து 
ப்ரண்ட்ஸ்,பெரியண்ணா,உயிரிலே கலந்தது என இவருக்கு
முக்கியத்துவம் இல்லாத பாத்திரமாக நடித்த இவரை பாலாவின் நந்தா படம் சிறந்த நடிகராக‌
உருவாக்கியது .இந்த வெற்றியோடு உட்கார்ந்து விடாமல் உடல் வருத்தி பல கடும் முயற்சிகள்
எடுத்து இவர் நடித்த காக்க காக்க,பிதாமகன்  போன்ற படங்களின் வெற்றி இவரை தமிழின் சிறந்த‌
நடிகராக்கியது மனந்தளராமல் தொடர்ந்து ஏழாம் அறிவு வரை சிறந்த படங்களில் நடித்துவிட்டார்
எந்த கேரக்டர் என்றாலும் அனயாசமாக செய்யும் இவரின் பாங்கு அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.தற்போது நடிகர்களில் உச்ச நடிகராகி யாரும் தொடமுடியாத எல்லையை நெருங்கிகொண்டிருக்கிறார்.

1 comment:

  1. யாருக்குமே தெரியாத பல அரிய தகவல்கள் நன்றி

    ReplyDelete