Tuesday 23 August 2011

கமலஹாசன்



பரமக்குடி எனும் சிறு நகரத்தில் இருந்து கிளம்பி இன்று உலக நாயகனாக உருவெடுத்திருக்கும் கமல் ஆரம்பத்தில்
களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து முடித்தபோதும் முதல் படத்திலே சிறந்த குழந்தை நட்சத்திர விருதுகள்
பெற்றபோதும் இவர் கதாநாயகன் நிலையை அடைய மிகுந்த சிரமம் அடைய வேண்டி இருந்தது.ஆரம்பத்தில்
குறத்திமகன் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருப்பார்.இயக்குனர் பாலச்சந்தரின் இயக்கத்தில்
இவர் அரங்கேற்றம்,மன்மதலீலை,அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் பாரதிராஜா
இயக்கத்தில் வந்த 16 வயதினிலே படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.தொடர்ந்து சிங்கிதம் சீனிவாச்
ராவ் இயக்கத்தில் வெளிவந்த இவரின் 100வது படமான ராஜபார்வை படத்தில் இருந்து இவர் தனது ஒவ்வொரு
படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் ராஜ பார்வை படத்தில் கண்தெரியாதவராக‌
நடித்து இருப்பார் பேசும்படம் என்ற படத்தில் வசனமே இருக்காது .புன்னகைமன்னன்,அபூர்வ சகோதரர்கள்
இந்தியன்,அவ்வைசண்முகி, தசாவாதாரம் என்று இவரின் திரைதாகம் இன்றும் தொடர்கிறது.

No comments:

Post a Comment