Monday 1 August 2011

கவுண்டமணி செந்தில்




தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கியவர்கள் என்றால் அது கவுண்டமணி செந்திலும்தான் இரண்டு நாட்களுக்கு
முன் ஒரு நாளிதழில் கவுண்டமணி செந்தில் காமெடி போல் அவர்களே நினைத்தாலும் நடிக்கமுடியாதுஎன்று வந்திருந்தது அந்த‌
அளவுக்கு காலச்சூழ்நிலைகள் மாறிவிட்டன இவர்கள் இருவரும் இணைந்து முதன்முதலில் நடித்து சூப்பர் ஹிட்ஆன காமெடி என்றால் அது வைதேகி காத்திருந்தால் படம்தான். இதில் இடம் பெற்ற பெட்ரோமாக்ஸ் காமெடி
ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி ஆகும்.இவர்கள் இருவரும் உதயகீதம் படத்தின்வெற்றியின் மூலம்
நகைச்சுவை எழுத்தாளர் வீரப்பன்  தொடர்ந்து இவர்களை வைத்து காமெடி எழுதினார்.தொடர்ந்து இவர் எழுதிய‌
கரகாட்டகாரன் காமெடி மூலம் புகழின் எல்லையை தொட்டனர் இருவரும்.தொடர்ந்துசின்னகவுண்டர்,ஜென்டில்மேன்
போன்ற படங்களில் இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்தனர்.கவுண்டமணி, ராஜா எங்க ராஜா போன்ற படங்களில்
கதாநாயாகனாகவும் நடித்துள்ளார். இவர்களின் காலம் போல் திரும்ப வருமா என்பது கேள்விகுறியான விஷயம்தான்.

No comments:

Post a Comment