Tuesday 28 February 2012

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சரத்குமார்



கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய கண் சிமிட்டும் நேரம் படத்தில் அறிமுகமாகியவர் இவர்.இன்று தன்னுடைய நூறாவது படத்தை தாண்டி சென்றுவிட்டார்.இவர் அறிமுகமாகிய முதல் படத்தில் ஓல்லியான உடல்வாகுடன் கார்த்திக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வருவார்.இந்த படத்தின் தயாரிப்பாளரும் இவரே.தொடர்ந்து புதுப்பாடகன்,புது மனிதன் ,மெளனம் சம்மதம் உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தார்.இவரின் வில்லத்தனத்திற்க்கு கைகொடுத்த படம் ஆர்.கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம்தான்.முறுக்கேற்றும் உடம்புடன் வில்லனாக இவர் நடித்த புலன் விசாரணை படமே யார் இவர் என எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தது.தொடர்ந்து வில்லத்தனம் போரடிக்க கேப்டன் பிரபாகரன் அப்பாவி காட்டிலாகா அதிகாரியாக நடித்து பெயர் வாங்கினார்
கே.எஸ் ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் இவர் புகழை உயர்த்தியது என்றால் .இயக்குனர்
பவித்ரனின் சூரியன் சூப்பர்ஹிட் படமாகி இவருக்கு ஒரு அசைக்க முடியாத கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்தது.தொடர்ந்து ரவிக்குமாரின் நாட்டாமை,விக்ரமனின் சூரிய வம்சம் போன்ற படங்கள் இவர் புகழை உயர்த்தியது.தற்போதும் பிஸியாக நடித்துக்கொண்டும்
சமத்துவமக்கள் கட்சி என்ற அமைப்பையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்

No comments:

Post a Comment