Thursday 22 December 2011

ராஜ்கிரணும் ராகதேவனும்

80களின் இறுதியில் சினிமாவுக்கு வந்த ராஜ்கிரணுக்கு இளையராஜா என்றால் கொஞ்சம் மதிப்பு
ஜாஸ்தி. அண்ணன் என்று இளையராஜாவை உரிமையுடன் அழைக்கும் பழக்கம் உள்ளவர்.இளையராஜா மேல் உள்ள மரியாதை காரணமாக தன் படங்களுக்கு ராசா என்ற வார்த்தை வருவதை வழக்கமாக வைத்திருந்தார் இவரது தயாரிப்பு நிறுவனமான ரெட்சன் ஆர்ட்
கிரியேசன்ஸ் சார்பாக இவர் தயாரித்த இயக்கிய படங்கள் சக்கை போடு போட்டன எனது ஊரான இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் இவர் என்பதில் கொஞ்சம் பெருமை எனக்கு
உண்டு.இவர் இயக்கிய படங்கள் அரண்மனைக்கிளி,எல்லாமே என் ராசாதான், ஆகியவை இவர்
இயக்கிய படங்கள் இவர் தயாரிப்பு மட்டும் பண்ணிய படங்கள் ராசாவே உன்னை நம்பி,என்னெப்பெத்த ராசா,என்னை விட்டு போகாதே,என்ராசாவின் மனசிலே இவர் முதலில் திரையில் தோன்றிய படம்
ராசாவே உன்னை நம்பி என்ற படத்தில் இடம்பெற்ற சீதைக்கொரு ராவணன் பாடல் மூலம் திரையில் தோன்றினார்.எப்படி எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு டி.எம்.எஸ் குரல் பொருந்துகிறதோ
அதைப்போல இவரது நடிப்புக்கு இளையராஜா குரல் இயல்பாக பொருந்தும் .90களின் இறுதியில்
இளையராஜாஇசை மூலம்குளிர்காய்ந்து நல்ல படங்களை கொடுத்த‌  மணிரத்னம்,பாரதி ராஜா,பாலச்சந்தர்.ஆகியோர் விலகிய நேரத்தில் ராஜ்கிரணின் படங்களாலும் பாடல்களாலும்
இசைஞானிக்கு சற்று ஆறுதலை தந்தது உண்மை.இவர் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும்
அரண்மணைக்கிளி படத்தில் இடம்பெற்ற அம்மன் கோவில் கும்பம் பாடல் மூலம் சிறப்பான‌
நடிப்பை வெளிப்படுத்தி மதச்சார்பின்மைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.இசைஞானி என்று அடைமொழியுடன் அறியப்பட்ட இளையராஜாவை ராகதேவன் என்று தன் படங்களில் புது நாமகரணம் சூட்டி நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த நல்ல நடிப்புத்திறமையுள்ள சிறந்த கலைஞர் இவர்

No comments:

Post a Comment