Monday 12 December 2011

விஜயகாந்த் ஒரு சின்ன முன்னோட்டம்



இவர்கள் இருவரும் இப்போது முழுநேர அரசியல்வாதிகளாகி விட்டனர் இவர்கள் வாழ்க்கை பற்றி ஒரு சின்ன முன்னோட்டம்

எம்.ஜி.ஆரின் ரசிகரான விஜயகாந்த் மதுரையில் தந்தை அழகர்சாமி நடத்திய ரைஸ்மில்லில் வேலை செய்தார்.இவருக்கிருந்த சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடிவந்தார்.தன் நண்பர் அ.செ இப்ராஹிம்
ராவுத்தர் இவருக்கு பக்கபலமாக இருந்தார். கடுமையான முயற்சிக்கு பிறகு இனிக்கும் இளமை படத்தில் நாயகனாக‌
அறிமுகமானார்.தொடர்ந்து அகல்விளக்கு,தூரத்து இடி முழக்கம் உட்பட பல படங்களில் நடித்தார்.இவரது நான்காவது
படமான தூரத்து இடி முழக்கம் படமே தேசியவிருது பெற்ற படமாகும் இயக்குனர் சுந்தர்ராஜனின் வைதேகி காத்திருந்தாள் படம் இவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.தொடர்ந்து இவர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இவரை

வைத்து அதிக வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார் அதில் நல்லவன்,புலன்விசாரணை ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.இவர் கலைஞரின் அபிமானியாக இருந்தார் இவரது கல்யாணத்தை நடத்தி வைத்ததே கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்தான்.இவரது வசனத்தில் சிறையில் பூத்த சின்ன மலர்,பொறுத்தது போதும் படங்களில் நடித்துள்ளார்.இவரது அரசியல் ஆசையை ஆரம்பித்து வைத்தது லியாகத் அலிகான் அவர்கள் எழுதிய வசனம்தான்
இவர்கள் இருவரும் ஏழைஜாதி,எங்கமுதலாளி,பாட்டுக்கு ஒரு தலைவன் ,கேப்டன் பிரபாகரன் உட்பட பல படங்களில்
வசனகர்த்தாவாகவும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் இவர் எழுதி கொடுத்த பல படங்களில் வசனம் அனல் பறக்கும் அரசியல் வசனமாகத்தான் இருந்தது.விஜயகாந்தின் அரசியல் ஆசைக்கு தூண்டுக்கோலாக இவரது வசனங்கள்
விளங்கியது. இப்ப்போது தனிக்கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவரானதுதான் எல்லாருக்கும் தெரியுமே

No comments:

Post a Comment