Friday 9 December 2011

இளையராஜாவும் சில தேன்குரல்களும்



இளையராஜாவின் பாடல்களுக்கு மயங்காதார் இந்த தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்க்கு இவரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு இவரோடு சேர்ந்து
இவரின் ஒவ்வொருபாடலையும் அழகுபடுத்திய பின்னணி பாடக,,பாடகிகளை பற்றி பார்க்கவே
இந்தபதிவு.

எஸ்.பி.பி


தமிழில் எம்.ஜி.ஆர் காலத்திலே அறிமுகமானாலும் இளையராஜாவின் இசையில் இவர் பாடிய‌
பாடல்கள் நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது குறிப்பாக இளையராஜாவும் இவரும் வாடா போடா
என்று அழைத்துகொள்ளக்கூடிய அளவிற்க்கு நெருங்கிய நண்பர்கள்.இவர் தமிழ் ,தெலுங்கு படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்கள்.இவரின் குரலில் பிடித்த பாடல்களை குறிப்பிட்டு சொல்லமுடியாது.இருந்தாலும் எனக்கு பிடித்த சில பாடல்கள்
எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன் ,தகிட ததிமி தந்தானா,
தோகை இளமயில்,சங்கீத ஜாதிமுல்லை, இப்படி எண்ணற்ற பாடல்களை சொல்லிக்கொண்டே
போகலாம் இந்த பதிவு பத்தாது.

கே.ஜே ஜேசுதாஸ்


பொம்மை படத்தில் நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல்மூலம் அறிமுகமான ஜேசுதாஸ்
தமிழ்,மலையாளம்படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் அருமையான‌
குரல்வளம் உள்ள ஜேசுதாஸின் குரல் இளையராஜாவின் சோகப்பாடல்களுக்கு பொருந்தி போகும் என் ஜீவன் பாடுது,உயிரே உயிரின் உயிரே கங்கை கரை மன்னனடி போன்ற பாடல்களை
உதாரணமாக சொல்லாம்.ஆகாயவெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ காதல் பாடலாகட்டும்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி போன்ற துள்ளளிசை பாடலாகட்டும் எதை கொடுத்தாலும் வெளுத்துக்கட்டுவார்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்இவரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது சொர்க்கத்தின் வாசற்படி,ஆகாய வெண்ணிலாவே போன்ற பாடல்கள்
என் ஆல் டைம் பேவரிட் சாங்.

மனோ


இளையராஜாவின் அறிமுகமானஇவர் நாகூர் என்ற இயற்பெயரைக்கொண்டவர் இளையராஜாவால் மனோ என்ற பெயர் சூட்டப்பட்டு சொல்லத்துடிக்குது மனசு படத்தில் இடம்பெற்ற தேன்மொழி பாடல் மூலம் பிரபலாமானவர்.எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில்
மதுரை மரிக்கொழுந்து பாடல் இவர் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.குரலை மாற்றி பாடுவதில் வல்லவரான மனோ சூரசம்ஹாரம் படத்தில் இடம்பெற்ற வேதாளம் வந்து நிக்குது
பாடலை குரலை மாற்றி அதி அற்புதமாக பாடியவர்.இரண்டில் ஒன்று படத்தில் இடம்பெற்ற‌
சங்கீத பூமலையே,புதியராகம் படத்தில் இடம்பெற்ற ஓஜனனி, எங்க ஊரு மாப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற வானத்துல வெள்ளிரதம் பாடலும் படத்தில் இடம்பெறாத அமைதிப்படை பாடலான சொல்லிவிடு வெள்ளி நிலவே பாடலும் மைக்கெல் மதன காமராஜன் பாடலான ஆடிப்பட்டம் தேடிச்சன்னல் விதைபோட்டு பாடலும் என் விருப்பபாடல்கள் எதனால் படத்தில் இவை இடம்பெறவில்லை எனத்தெரியவில்லை.


தீபன்சக்கரவர்த்தி


மறைந்த பாடகரான திருச்சிலோகநாதனின் மகன் இவர் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற‌
தத்துவத்தின் அடிப்படையில் இவரும் சிறந்த பாடகர்தான்.இவர் குரலை மாற்றிப்பாடிய கோழி
கூவுது பாடலான அண்ணே அண்ணே சிப்பாயண்னே பாடல் இவர்தான் பாடினார் என யாராலும்
கண்டுபிடிக்கமுடியாது குறிப்பாக காதல் ஓவியம் படத்தில் இடம்பெற்ற பூஜைக்காக வாழும்
பூவை சூறையாடல் முறையோ பாடலை இவரையும் எஸ்.பி.பியையும் பாடவைத்து எஸ்.பி.பி
பாடியதை இளையராஜா சேர்த்துவிட்டார் எஸ்.பி.பி தலையிட்டு இவர் பாடியதே நன்றாக இருந்ததென சொல்ல அதையே படத்தில் சேர்த்துவிட்டார் இளையராஜா.எங்க ஊரு காவல்காரன்
படத்தில் இடம்பெற்ற அரும்பாகி மொட்டாகி பூவாகி எனக்கு மிகப்பிடித்தபாடல்.

கிருஷ்ணசந்தர்


மலையாளப்பாடகரான இவர் இளையராஜாவின் இசையில் அதிகம் பாடாவிட்டாலும் ஒரு
ஓடை நதியாகிறது படத்தில் இடம்பெற்ற தென்றல் என்னை முத்தமிட்டது பாடல் எனக்கு மிகப்பிடித்த பாடல்


விஜய் என்ற உன்னிமேனன்


தற்போது வரும் பாடல்களை அதிகம் பாடும் பாடகர்தான் என்று இவரை நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் 80களில் வெளியான ஒரு கைதியின் டைரி படத்தில்
இடம்பெற்ற பொன்மானே கோபம் ஏனோ பாடலை இவர்தான் விஜய் என்ற பெயரில் பாடினார்
என எனக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் தெரிந்தது.

உன்னிக்கிருஷ்ணன்


இளையராஜாவின் இசையில் தாஜ்மகால் அருகே விஜய்,வனிதா ஆடும் அல்லா உன் ஆணைப்படி பாடல் அந்த தாஜ்மகால் போலவே வரலாற்றில் நிலைத்து இருக்கும் குறிப்பாக‌
காதல் ரோஜாவே படத்தில் இடம்பெற்ற நினைத்தவரம் கேட்டு பாடல் மிக மிக இனிய பாடல்

மலேசியா வாசுதேவன்


இளையராஜாவின் அனேக துள்ளளிசை பாடல்களில் துள்ளலான இவரின் குரல்தான் அதிகம் ஒலிக்கும்.தேடும் தெய்வம் நேரில் வந்தது,ஆட்டுக்குட்டி முட்டையிட்டு,மாவீரன் படத்தில்
இடம்பெற்ற வாங்கடா வாங்க வண்டிக்கு பின்னாலே முரட்டுக்காளை பாடலான பொதுவாக‌
எம்மனசு தங்கம் போன்ற பாடல்கள் என்று இவரின் துள்ளல் பாடல்களை பட்டியல் போட‌
இந்த ஒரு பதிவு பத்தாது மெலடி பாடல்களிலும் இவர் ஒரு கிங்தான் குறிப்பாக பன்னீர்புஷ்பங்கள்
படத்தின் பாடலான கோடைகாலகாற்றே,பாகவதர் குரலில் பாடிய ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே,சுகராகமே பாடல்களை தமிழ்சினிமா இருக்கும் வரை மறக்கமுடியாது

பாலமுரளிகிருஷ்ணா


இவர் பிரபல கர்நாடக இசைமேதையாவார் இவரையும் இளையராஜா விடவில்லை இவரது முயற்சியால் கவிக்குயில் படத்தில் இடம்பெற்ற சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடல் மூலம்
நம்மை மெய்மறக்கசெய்து இருப்பார்




அருண்மொழி&எஸ்.என் சுரேந்தர்



இளையராஜாவிடம் புல்லாங்குழல் வாசித்த அருண்மொழி சூரசம்ஹாரம் படத்தில் இடம்பெற்ற‌
நான் என்பது நீயல்லவோ பாடல்மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார் சில பாடகர்களின்
சில பாடல்கள் ஒருவர் என்னதான் ஒரு பின்னணி பாடகரின் ரசிகராக இருந்தாலும் அவர் பாடிய ஏதாவது ஒரு பாடல் பிடிக்காமல் போகும் இவரை பொறுத்தவரை இவர் பாடிய அனைத்து பாடல்களும் எல்லாருக்கும் பிடிக்கும் அந்த அளவிற்க்கு எல்லோரையும் கட்டிப்போடும் இவரது
குரல்வளம் ராஜாவின் பார்வையிலே படத்தில் இடம்பெற்ற அம்மன்கோவில் எல்லாமே எனக்கு
மிகவும் பிடித்த பாடல் அதே போல எதிர்காற்று படத்தில் இடம்பெற்ற ராஜா இல்லா ராணி என்றும் பாடலும் மிக பிடித்த பாடல் அதேபோல் நடிகர் மோகனுக்கு பல படங்களில் குரல் கொடுத்த எஸ்.என் சுரேந்தரும் மிகபிடித்த பாடகர்தான் குறிப்பாக இன்னிசை மழை படத்தில் இடம் பெற்ற மங்கை நீ மாங்கனி பாடல் தேவன்கோவில் தீபம் ஒன்று பாடலும் மிகச்சிறப்பான‌
பாடலாகும்.

ஜெயச்சந்திரன்


ராஜாவின் இசையில் மெகா ஹிட்டான ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு,காத்திருந்து காத்திருந்து
பாடல் இவர் பாடியதுதான் இவரும் இனிய குரல் உள்ள சிறந்த பாடகர்தான் இவர் பாடிய தழுவாத‌
கைகள் படத்தில் இடம்பெற்ற ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ, போன்ற பாடல்களை 80களின் இளசுகள் யாராலும் மறக்கமுடியாது அதேபோல் உள்ளம் கவர்ந்த கள்வன் படத்தில் இடம்பெற்ற‌
என் மனச பறிகொடுத்து பாடலும் மிகச்சிறப்பான பாடல்

கமலஹாசன்


நடிகர்களில் கமலஹாசன் தான் இவர் இசையில் அதிக பாடல்கள் பாடியுள்ளார் அவள் அப்படித்தான் தொடங்கி ராஜபார்வையில் இடம்பெற்ற விழியோரத்து பாடல்மூலம் நம் நெஞ்சம்
கசக்கி பிழிந்தவர் சிங்காரவேலன்,பேர்சொல்லும்பிள்ளை,அபூர்வசகோதரர்கள்,சத்யா போன்ற தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலாவது பாடிவிடுவது இவர் வழக்கம்.இவர் படத்துக்கு மட்டுமல்லாது மோகன் நடித்த ஓமானே மானே படத்தின் பாடலான பொன்மானே தேடுதே பாடலுக்கும் குரல் கொடுத்தவர் இவர்.

டி.எஸ் ராகவேந்தர்


வைதேகி காத்திருந்தாள் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற அழகுமலராட பாடலில் க்ளைமாக்ஸில் பாடியே இறந்துவிடுவாரே அவர்தான் இவர். இவரும் இளையராஜாவுக்கும் உள்ள நட்பால் சில படங்களில் பாடியுள்ளார்
அதில் சக்கரைதேவன் படத்தில் இடம்பெற்ற பாக்குகொண்டா வெத்தலை கொண்டா பாடல் மிகவும் ஹிட் ஆன பாடலாகும்.

சங்கர்மஹாதேவன்


இவர் பாடியதில் சிட்டுபறக்குது குத்தாலத்தில் பாடல் என்மனம் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரின்
மனம் கவர்ந்த பாடல். இவர் பாடிய ஆக்ரோஷமான பாடலான அந்தபுரத்தில் இடம்பெற்ற தை தகதை பாடல் ரத்தத்தை சூடேற்றும் பாடலாகும்.

ஹரிஹரன்


புதியதலைமுறை பாடகராக இருந்தாலும் இளையராஜாவிடம் தீவிர நட்புடன் இருப்பார் இவர் பாடிய என்னை தாலாட்ட வருவாளா பாடல் 97ம் ஆண்டு இண்டு,இடுக்கு சந்து பொந்துகளில் எல்லாம் தமிழ்நாட்டில் ஒழித்த பாடல். இவரின் திறமையை வைத்து இளையராஜா யாருக்குமே
கொடுக்காத வாய்ப்பாக காசி படத்தில் எல்லா பாடல்களையும் இவரையே பாட வைத்தார்.

ஜாலி ஆப்ரஹாம்



கிறிஸ்தவமத பக்தி பாடல்களை பாடுபவர் இவர். தமிழில் வேறு இசையமைப்பாளர்கள்
சிலரின் இசையில் பாடல்கள் பாடியிருந்தாலும் கட்ட பஞ்சாயத்து படத்தில் இடம்பெற்ற ஒரு சின்னமணிக்குயிலு பாடல் பட்டிதொட்டியெங்கும் இவரைபறைசாற்றியது.மேலும் மாயா பஜார்1995
உட்பட பல படங்களில் இவர் பாடியுள்ளார்

இன்னும் பல பாடகர்கள் பாடகிகள் ஏராளமானோர் உள்ளனர் அவர்களை பற்றி அடுத்த பதிவில்
பார்ப்போம்
 தொடரும்.........

No comments:

Post a Comment