Tuesday 11 October 2011

கமலஹாசனின் பல்வேறு முகங்கள்



கமலஹாசனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது இவர் ஒர் சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும் வித்தியாசமான நடிப்பை ராஜபார்வை படத்திலேயே ஆரம்பித்தவர்.இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாது
நடன இயக்குனராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக இருந்தவர் நன்றாக ஆட தெரிந்த கமலுக்கு பாடவும் தெரியும்.அவள் அப்படித்தான் படத்தில் இடம்பெற்ற பன்னீர் புஷ்பங்களே என்று பாடிய கமல்
அம்மம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி என்று பாடி மன்மதன் அம்பு வரை நிறைய பாடிவிட்டார்.இது மட்டுமல்லாது
நடிகர் மோகனுக்கு ஓ மானே ஓ மானே என்ற படத்தில் பொன்மானே தேடுதே என்ற பாடலையும்,அஜீத்திற்க்காக‌


உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா என்ற பாடலையும்,தனுஷிற்காக புதுப்பேட்டை படத்தில் நெருப்பு வானில்
என்ற பாடலையும் பாடியுள்ளார் தனக்கு மட்டுமல்லாது பிற நடிகர்களுக்கும் பாடக்கூடியவர்.இவரின் ராஜ்கமல்
பிலிம்ஸ் சார்பாக அதிக படங்களை தயாரித்துள்ளார்.இவர் மட்டும் இந்நிறுவன படங்களுக்கு கதாநாயகனாக‌
நடிக்காமல் சத்யராஜை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கதாநாயகனாக‌
நடிக்கவைத்து அழகு பார்த்தவர் இவர் ஒரு நடிகர்,தயாரிப்பாளர்,பாடகர் மட்டுமல்லாது விருமாண்டி படத்தின் மூலம்
இயக்குனராகவும் ஆனவர் இப்போது சொல்லுங்கள் கமல் பல்வேறு முகம் கொண்டவர்தானே

No comments:

Post a Comment