Friday 23 March 2012

நடிகர் விஜய் ஒரு சிறு சினிமா வரலாறு

இவர் தந்தை சிறுவயதில் இயக்கிய படங்களில் சிறுவயது விஜயகாந்தாக இவர்தான் நடித்திருப்பார்.பின்பு ஒரளவு 15,16 வயதுகளில் ராம்கி நடித்து இவர் தந்தை இயக்கிய‌
இது எங்கள் நீதி என்ற படத்தில்.பள்ளியில் படிக்கும் மாணவனாக நடித்து பாதியில் இறந்துவிடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.சென்னை லயோலா கல்லூரியில் பயின்ற விஜய்க்கு படிப்பு ஏறவில்லை இவ்வளவிற்க்கும் தற்போதைய டி.வி அறிவிப்பாளரும் ராஜ்யசபா எம்.பி ரபிபெர்னார்ட்தான் விஜய்க்கு வகுப்பாசிரியர்.கல்லூரிக்கு செல்லாமல் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை சென்னை உதயம் தியேட்டரில் பலமுறை பார்த்ததாக சொல்வதுண்டு



இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை என்பதை புரிந்துகொண்ட இவரது தந்தை இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தினால்தான் சரியாகவரும் என்று இவரை தன் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்றபடத்தில் அறிமுகப்படுத்தினார் படத்தின் ஹீரோயின் ஈஸ்வரிராவ்.
படத்தில் கோர்ட் சீன்களை வைத்து இவரது தந்தை தன் வழக்கத்தை மாற்றாமல் எடுத்திருப்பார்
படம் சுமாராகத்தான் போனது.அடுத்ததாக விஜய் தன் தந்தை இயக்கத்தில் செந்தூரபாண்டி என்ற படத்தில் நடித்தார் எஸ்.ஏ சந்திரசேகர் மீது உள்ள மரியாதைக்காகவும் விஜய் மீது உள்ள நட்புக்காகவும் விஜயகாந்த் கெளரவவேடத்தில் இப்படத்தில் நடித்தார்.இப்படம் சற்று வெற்றிபெற்றது.அடுத்ததாக தந்தை இயக்கத்தில் ரசிகன் படத்தில் நடித்தார் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.இப்படம் ஓடியதற்க்கு சங்கவியின்

 திகட்டலான கவர்ச்சியும் ஒரு காரணம்  அடுத்தடுத்து வந்த விஷ்ணு,ரங்கநாதன் இயக்கத்தில் வந்த கோயமுத்தூர் மாப்ளே உட்பட சில படங்களில் சங்கவியின் கவர்ச்சியே பிரதானமாக இருந்து படம் வெற்றிபெற உதவியது.இதற்க்கு மேல் இப்படிப்பட்ட படங்களில் நடித்து கொண்டிருந்தால் நன்றாக இருக்காது
என்பதை உணர்ந்த விஜய் ,பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்த படம்தான் பூவே உனக்காக என்ற படம் 200 நாட்களை கடந்து குடும்பத்தோடு அனைவரும்
பார்க்கும் சிறந்தபடமாக இருந்தது.அடுத்ததாக பாசில் இயக்கத்தில் நடித்த காதலுக்கு மரியாதை
இவருக்கு டேர்னிங் பாய்ண்ட்டாக இருந்தது இந்தப்படம் சிறந்த இசைஞானியின் இசையாலும்
பாசிலின் சிறந்த இயக்கத்தாலும் விஜய் ஷாலினியின் சிறப்பான நடிப்பாலும் 300 நாட்களை கடந்து ஓடியது.இதோடு விஜய் மார்க்கெட் சூடுபிடித்து இதுபோன்ற காதல் கதைகளில் நடிக்க‌
ஆரம்பித்தார் அதில் துள்ளாதமனமும் துள்ளும் படம் சிறப்பாக ஓடியது படத்தை இயக்கியவர்
எழில்.இதற்க்குபிறகு இவரின் படங்கள் சொல்லிகொள்ளும்படியாக இல்லை நடுவில் செல்வபாரதி இயக்கத்தில் நடித்த வசீகரா நல்ல படமாக இருந்தும் என்ன காரணத்தினாலோ படம் சரியாகபோகவில்லை.இந்த நேரத்தில் இவருக்கு வந்து சேர்ந்த இயக்குனர் ரமணா அவர்கள்.இவரின் இயக்கத்தில் விஜய் நடித்த திருமலை என்ற படம் மசாலா படமாக இருந்தது.இந்த படத்தின் சுமாரான வெற்றி
இவருக்கு கொஞ்சம் தெம்பைகொடுத்தது.அடுத்ததாக தரணி இயக்கத்தில் நடித்த கில்லி படம்
மிகப்பெரும் வெற்றிபெற்றது.தொடர்ந்து மதுர,பகவதி,திருப்பாச்சி,சிவகாசி என்று கரம்மசாலா
படங்களாக நடிக்க ஆரம்பித்தார்.கடைசியாக இவர் நடித்த வேட்டைக்காரன்,சுறா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வ ஆரம்பித்தது.இந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட விஜய் இயக்குனர் சங்கரின் நண்பன் படத்தி நடித்தார்.படத்தின் வெற்றியால்.இப்போது பழைய இயக்குனர்கள் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வளர்ந்து வரும்,' துப்பாக்கி' படம் சிறக்க வாழ்த்துவோம்

No comments:

Post a Comment