Monday 1 August 2011

சிவாஜி கணேசன்

பராசக்தி படம் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கி இருநூறுக்கும் மேற்ப்பட்ட சினிமாக்களில் நடித்து நடிகர்
திலகம் என பெயர் பெற்றவர் இன்று வரை நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி
மட்டும்தான் இவரின் ஒவ்வொரு உடல் உறுப்பும் நடிக்கும் அவ்வளவு சிறப்பு மிகுந்த நடிகர் இவர். இவர் நடித்த‌தெய்வமகன்,புதியபறவை,வசந்த மாளிகை,முதல் மரியாதை,தில்லானாமோகனாம்பாள்,பாசமலர்,என்று
இவரின் படங்களை சொல்லிகொண்டே போகலாம் பாசமலர் படத்தில் இவர் நடித்த அண்ணன் வேடம் போல்
இன்று வரை யாராலும் நடிக்க முடியவில்லை.புதிய பறவை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் பேசும்
வசனம் அப்பப்பா சொல்ல வார்த்தைளே இல்லை இவரின் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு காவியம் வீரபாண்டிய‌
கட்டபொம்மன் படத்தில் இவர் பேசிய வானம் பொழிகிறது வசனம் இன்று வரைக்கும் மறக்கமுடியாத வசனம்
ஆகும்.இந்த அற்புதமான நடிப்பு சுடர் 2001ல் அணைந்தது

No comments:

Post a Comment